உயர்சாதி மக்களே ஒன்றுகூடுங்கள்

நாட்டில் எங்கும் தற்போது என்றுமில்லாத அளவுக்கு சாதிய உணர்வு மேலோங்கத் தொடங்கியுள்ளது. சாதிய அமைப்புகள் இன்று ஆலமரம் போல் பரந்து விரிந்து காணப்படுகின்றன. சிறுபான்மை (உண்மையில் இவர்கள் தான் பெரும்பான்மை ) இனத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் ஒரு குட்டி அரசாங்கமே நடத்தி வருகின்றனர்.

எல்லா கட்சிகளிலும் இவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு. தொழிற்சங்கங்களில் இவர்களுக்கென தனி தொழிற்சங்கம் மற்றும் அதன் தனித் தலைவர்கள். உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகள். எல்லா அரசாங்க உத்தியோகங்களிலும் இவர்களுக்கென பிரத்யேக சலுகைகள். இப்படி எண்ணிலடங்கா சலுகைகளை அனுபவித்து வரும் இவர்கள், மிகவும் ஆனந்தமாக உள்ளனர். ஆனால் உயர்சாதி மக்களிடத்தே காணப்படும் ஒற்றுமையின்மை காரணமாக பிளவுப்பட்டு இருப்பதினால் மெல்ல மெல்ல தம் அடையாளங்களை இழந்து வருகின்றனர். தங்களின் அடிச்சுவடு கூட காணாமல் போகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதை இன்னமும் இவர்கள் உணர்ந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது.

"சாதிகள் இல்லை, சாதிகள் இல்லை" என்பவையெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் தான். அடிப்படையற்ற முறையில் அரசாங்கம் சலுகைகளை குறிப்பிட்ட சிலப் பிரிவுகளுக்கு மட்டும் அளிப்பது என்பது நயவஞ்சகத்தின் உச்சகட்டம். பிரித்தாளும் கொள்கையை நயமாகப் பயன்படுத்தி நாட்டை கூறுபோட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உயர்சாதி மக்களாகிய இவர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய கட்டாய தருணமிது.

ஒரு காலத்தில் பெரும்பான்மை இடங்களில் (சலுகையினால் அல்ல, திறமையினால் மட்டும்) கோலோச்சிக் கொண்டிருந்த இவர்களின் இன்றைய நிலை என்ன? சமுதாயத்தில் இவர்களுக்கிருக்கும் மரியாதை என்ன? பாதுகாப்பு தான் என்ன? இவர்களின் மொத்த மக்கள்தொகை முன்பிருந்ததில் 30% கூட தற்போது இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இவர்களின் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டது. 100-க்கு 98 எடுத்தால் கூட கல்வி நிறுவனங்களில் இடம் கிடையாது. ஆனால் மற்றவர்கள் 100-க்கு 40 பெற்றாலே போதும் உயர் கல்வி நிறுவனங்களில் கூட இவர்களுக்கென்ற பிரத்யேகமான இடங்களில் , இடம் உறுதி. இதே நிலை தொடருமாயின் உயர்சாதி மக்கள் யாவரும் மாடு மேய்க்கத்தான் செல்ல வேண்டும். (அங்கும் கூட இட ஒதுக்கீடு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை) தொடரும் அநியாயங்களை இனியும் தட்டிக் கேட்காமலிருந்தால் மேற்கூறிய வேலையை விட தாழ்ந்த வேலை தான், ஏன் அது கூட கிடைக்காத பிச்சையெடுத்து உண்ணும் நிலை தான் ஏற்படும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் வேண்டாம்.

'அன்று யூதர்களுக்கு ஏற்பட்ட நிலைமை தான் இவர்களுக்கும் இன்று ஏற்பட்டுள்ளது " என்பதை இவர்கள் அறிந்திடாதது ஏனோ? இவர்களில் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியுள்ளவர்களின் நிலை மிகவும் மோசமானதாகவே உள்ளது. சமையற் கூடங்களிலும், சிறு கோயில்களிலும் வரும் சொற்ப வருமானத்திலேயே ஒட்டு மொத்த குடும்பத்தின் ஜீவனாம்சமே உள்ளது என்பது நெஞ்சைப் பிழிகிறது. இத்தகைய குடும்பத்து மாணவர்களின் கல்வி பாதியிலேயே நின்று விடுவது மிகவும் வருந்த்தத்தக்கது. திறமையிருந்தும் பொருளாதார வசதியின்மையினால் இவர்களுக்கெல்லாம் மேற்படிப்பு என்பது எட்டாக்கனியாகவே தொடருவது ஆண்டவனுக்கே பொறுக்காது. எந்தவித அரசாங்க சலுகையும் இவர்களுக்கு அளிக்கப்படாதது, நாட்டின், இந்தியாவின் மதசார்பற்ற தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரானது. பொருளாதார அடிப்படையில் சலுகைகளை அளிப்பதை விடுத்து, வெறும் சாதியின் அடிப்படையில் சலுகைகளை வழங்குவதென்பது ஆபாசமானச் ¦செயல் மட்டுமல்ல, அது விபச்சார்த்திற்கு சமமும் கூட.

காங்கிரஸ் அரசின் அடிப்படையற்ற இட ஒதுக்கீட்டுக் கொள்கையினால் இவர்களின் ஒட்டு மொத்த சந்ததியினரே பாதிக்கப்படும் அபாயத்திலிருந்து எப்படி காப்பாற்றப் போகிறீர்கள்? சாதிய அமைப்புகளை முற்றிலுமாக வெறுத்திடினும், இற்றைய நிலையில் இழந்த இவர்களின் முகவரியை, அடையாளத்தை மீட்டிட இவர்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படத்திட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது. தப்பி பிழைக்க வேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை என்றும் மறந்துவிடக் கூடாது. இந்த இழிநிலைக்கு காரணமென்ன என்பதை ஆராய்ந்திட வேண்டும்.

சிங்கம் போல வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள், இன்று நாயை விட கேவலமாக வாழ்வதை எண்ணும்போது கூனிக்குறுக வேண்டியுள்ளது. ஒற்றுமையின்மை மற்றும் உதவி செய்திட வேண்டும் என்ற மன்ப்பான்மையினால்தான் இந்த நிலை.
ஒற்றுமை என்கின்ற சங்கிலியால் இம்மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்திட, ஓர் அமைப்பை ஏற்படுத்திட வேண்டும். அது இழந்த உரிமைகளை, சலுகைகளை திரும்பப் பெற்றிட அன்று. இவர்களின் உரிமையை, அதிகாரத்தை நிலை நாட்டிட. ஆம், யாரிடமும் இறைஞ்சுண்ணும் நிலை என்றுமே கிடையாது இவர்களுக்கு.

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.