Can't view the contents correctly? Click Here >>

இது சாபக்கேடு போலும்

இந்தியா அதன் தொன்மைக்கும், புகழுக்கும், பண்பாட்டிற்கும் இன்றளவிலும் உலக அளவில் பேசப்படுவதின் காரணம் சிறப்பான வாழ்க்கை முறையும் அதன் மக்களும் தான். பலதரப்பட்ட மனிதர்களை ஒரே இடத்தில் காணவேண்டுமானால் அது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும். பல மதத்தினர், பல இனத்தவர் வாழும் ஒரே நாடான இந்தியாவில் தான் 100-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு மேம்பட்ட கலாசாரமும், கல்வியும் மேலோங்கியிருந்திருக்கிறது. உலக நாகரிகத்தின் தொட்டில் என இந்தியாவை அழைத்தாலும் அது மிகையன்று. இப்படி ஏராளமான சிறப்புகளுக்கு காரணம், இந்தியாவில் பெருவாரியாக வாழும் இந்துக்களே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் எனத் தமிழகத்தை போற்றினாலும் இந்தியாவிற்கும் அதில் முக்கிய இடமுண்டு. எவர்வரினும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்கும் இந்தியாவில் அந்நிய படையெடுப்புகளினாலும், அண்டை நாடுகளில் ஏற்பட்ட பிரச்சனைகளினாலும் ஏராளமான மக்கள் குடிபெயர்ந்து இங்கேயே நிரந்திரமாக தங்கிவிட்டனர்.பல நூற்றாண்டுகளாக இங்கு இந்துக்களும் மற்ற மதத்தினரும் சாகோதரர்களாக பழகியும், வாழ்ந்தும் வந்தனர். அதேசமயம் நிரூ பூத்த நெருப்பாக ஆங்காங்கே சிற்சில மதப்பிரச்சனைகள் தலையெடுத்ததையும் நாம் இங்கே மறுப்பதற்கில்லை. இருப்பினும் இதன் வீரியம் மிக அதிகமானது பரங்கியர் ஆட்சிக்காலத்தில் தான். இந்தியாவை துண்டாட அவர்கள் எடுத்த முக்கிய ஆயுதமான ”பிரித்தாளும் கொள்கை” தான் மதப்பிரச்சனைகளின் மூலாதாரம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தி, இந்தியாவை சூறையாண்ட பரங்கியர் தம் மதமான கிறித்துவத்தையும் இந்தியாவில் கோலோச்ச மறக்கவில்லை. ஏராளாமான நிதியுதவிகளை அள்ளிவீசி, மக்களை தீவிர மதமாற்றத்திற்கு வழிகோலியதும் அன்றைய பரங்கியர்கள் தான்.

எண்ணிலடங்கா கல்வி நிறிவனங்களை நிறுவி அதன் மூலம் மதப்பிரச்சாரம் மேற்கொண்ட கிறித்துவர்கள் சமுதாயத்தில் நலிவுற்றிருந்த மக்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதனைப்பற்றி சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலகமத மாநாட்டில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். “மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று” என்று அவர் குறிப்பிட்டது கிறித்துவ மதமாற்றம் தான். அந்த மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளியே இல்லாததினால் தான் இன்று இந்தியாவில் ஏராளாமான இந்துக்கள் கிறித்துவர்களாக மதமாறி இரண்டு மூன்று தலைமுறையையும் கண்டுவிட்டனர். வேற்றுமையில் ஒற்றுமை என்று பேசிப்பேசியே மற்றவர்களும் இதனை பொருட்படுத்தாமல் காலம் கடத்திவிட்டனர்.

சிறுபான்மையினர் என்றாலே ஒற்றுமை இருப்பதும், பெரும்பான்மை என்றாலே வேற்றுமை இருப்பதும் இயற்கை தான். இந்த வேற்றுமை தான் அந்த இனத்தையே தற்போது அழித்துக் கொண்டிருக்கிறது. ஆம், முன்பு கூறிய பரங்கியரின் அதே பிரித்தாளும் கொள்கையைதான் இன்றைய பகுத்தறிவு பேசும் அரசியல்வாதிகள் கையிலெடுத்துக்கொண்டு நாட்டை விலைபேசிக் கொண்டிருக்கின்றனர்.

தன் இனத்தை தானே அழிப்பது மனிதன் மட்டும் தான் என்கிற கருத்து பொதுப்படையான கருத்தாகவே எனக்குத் தோன்றுகிறது. காரணம், இது இந்துக்களுக்குத் தான் மிகச்சரியாக பொருந்துகிறது. எப்படியெனில், இந்துக்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பது இந்துக்கள் தான், தமிழ்நாட்டில் இந்து துவேஷத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டுவரும் மு.கருணாநிதி தற்போது வேண்டுமானால் தான் எந்த மதத்தையும் சாராதவன் என்று கூறலாம். ஆனால், அவர் பெற்றோர் ஒரு இந்து என்பதினால் அடிப்படையில் அவரும் இந்துதான்.இந்து மதச்சட்டம் தான் அவருக்கும். மதசார்பற்றவர்கள் தாங்கள் எனப்பறைச்சாற்றிக் கொள்ளும் ஏனையவர்களும் இந்துக்கள் தான். இன்னும் சொல்லப்போனால், மதசார்பற்றவர்கள் என்று பேசுவதே இந்துக்கள் தான்.

குறுகிற அரசியல் காரணத்திற்காக இந்துக்களை இழிவாகப் பேசுவதும் மற்ற மதத்தினரை உயர்வாகப் பேசுவதும் இவர்களின் வாடிக்கையாகவே போய்விட்டது. அதிலும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் செயல்பாடுகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்து என்றால் திருடன் என்கிறார். கலைஞர். தான் இந்துவாகப் பிறந்ததற்கு வருத்தப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும், சொல்கிறார். கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு. இவ்வார்த்தைகளை கேட்டு எந்த இந்துவும் கொதித்தெழவில்லை. இந்துக்களுக்கு எதிராக பேசுவது தான் பகுத்தறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கும் மு.க., இந்துக்களின் ஆசியினால் தான் 5 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தௌவாக தெரிந்துக் கொண்ட பின்னும் துவேஷத்தை தொடர்ந்து கொண்டிருப்பதற்கு இந்துக்களின் அறிவீனமும் அதனால் உண்டாகும் ஒற்றுமையின்மையும் தான். இல்லையென்றால் மற்ற மதத்தை உயர்த்தியும், இந்து மதத்தை பன்மடங்கு தாழ்த்தியும் பேசிவரும் இவரை, அரசியலை விட்டே நிரந்திரமாக ஒதுக்கியிருக்க வேண்டாமா?

தான் மதச்சார்பற்றபவன் என்று சதாசர்வகாலமும் புலம்பிக்கொண்டிருக்கும் இவர், ரம்ஜான் மாதத்தில் நோன்புக் கஞ்சிக்கும், இப்தார் விருந்துக்குக்கும் குல்லா போட்டுக்கொண்டு தவறாது சென்றுவிடுகிறார், ஆனால் இந்துப்பண்டிகை என்றால் ‘திருடர்களின் விழா’ என்று கவிதை பாடுகிறார்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான கல்விக்கூடங்கள் கிறித்துவ கல்விக்கூடங்களே. மதப்பிரச்சாரத்திற்காக கையிலெடுக்கப்பெற்ற இந்த ஆயுதத்தைக் கொண்டு இன்று ஏராளமான கிறித்துவ கல்வி நிறுவனங்கள் பணத்தில் மூழ்கி திளைத்து வருகின்றன. எளிதில் சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்றுவிடும் இவர்கள், தற்போது கல்வித்துறையில் சர்வாதிகாரப் போக்கினை மேற்கொண்டு வருகின்றனர். கிறித்துவ மாணாக்கர்கள் என்றால் ஒரு கட்டணம், மற்ற மதத்தினர் என்றால் ஒரு கட்டணம். ஆசிரியர் நியமனத்திலிருந்து அனைத்து நிலைகளிலும் இதே நிலைதான். எங்கும் பாகுபாடு, எதிலும் பாகுபாடு அனைத்துச் சலுகைகளும் கிடைக்கப்பெற வேண்டுமானால் நீங்களும் கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று இடைவிடாத பிரச்சாரம் வேறு, இந்த ஏதேச்சதிகாரத்திற்கு எதிராக போர்க்கொடித் தூக்க எந்த அரசாங்கமும் இதுவரை முன்வந்ததில்லை. காரணம், மலிவான அரசியல் நோக்கம், ஒட்டு வங்கி முதலியன தாம்.

இந்தியாவிற்கு அழுகு சேர்க்கும் கீரிடம் போல வீற்றிருக்கும் காஷ்மீரில் தற்போது இந்துக்களுக்கு எதிராக பெரும் கலவரமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமர்நாத் யாத்ரிகர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட நிலத்தை திட்டமிட்டு திரும்பப் பெற்றுக்கொண்ட விஷயத்தில் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பெருத்த போராட்டமே வெடித்து ஏராளமான இந்துக்கள் நாளும் இறந்துவரும் வேளையில் இந்துக்களின் நியாமான கோரிக்கைக்கு ஆதரவாக எந்தத் தலைவர்களும் குரல் எழுப்பவில்லை.

ஆண்டின் சில மாதங்களே உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை காணவரும் இந்துக்கள் இங்கேயே நிரந்திரமாக தங்கிவிட்டால் அவர்களின் எண்ணிக்கை அதிகமாகி மூஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற பொய்ப்பிரச்சாரத்தினால் இருதரப்பினருமே தற்போது மோதிக்கொண்டிருக்கன்றனர். இந்த சூழ்நிலையில் முஸ்லீம்களில் சிலர், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியுள்ளனர். இந்தியாவில் இருந்துகொண்டு, இந்தியாவுக்கே எதிராக செயல்பட்டு வரும் அந்த முஸ்லீம்களை இது வரை எந்த பகுத்தறிவு தலைவரும் கண்டிக்காததின் காரணம் இவர்களும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்பதுதான். இப்படிப்பட்ட புல்லுருவிகளை இந்துக்கள் இனம் கண்டு கொண்டார்களா என்றால் அது சந்தேகமே. நிரந்தரத் தூக்கத்திலிருக்கும் இவர்களின் விடியல் எப்போது என்பது அந்த ஆண்டவனுக்கேக் கூடத் தெரியாது போலும்.

தானாடவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பழமொழி, அங்கே அடித்தால் இங்கே வலிக்கும் என்பது புதுமொழி. இது சமீபத்திய ஒரிசா மாநிலத்தில் கிறித்துவர்களுக்கு எதிராக நடைபெற்ற போரட்டத்தில் நிருபணமாகியுள்ளது. ஆம், இப்போரட்டத்தைக் கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து கிறித்துவ மதத்தினரும் ஒருமித்த குரலில் தம் கண்டனக்குரலை எழுப்பியுள்ளனர். காரணம் பாதிக்கப்பட்டவர்கள் கிறித்துவர்கள் என்பதினால்தான். எல்லாத் தமிழக தலைவர்களும் (என்று கூறிக்கொண்டு) வரிந்து கட்டிக்கொண்டு தம் கண்டனத்தையும் மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோளையும் விடுத்துள்ளனர். கிறித்துவ மதத்தினர் மீது அவ்வளவு அக்கறை இவர்களுக்கு. ஆனால், இந்து மதத்தினர் என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மை இந்துக்களும் இதை உணராது, தொடர்ந்து இந்த அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்து, தம் தலையில் தாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்கின்றனர். பா.ஜ.க. தலைவர் வெங்கயை நாயுடு இவ்விஷயத்தில் தமது கட்சியின் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ‘ஒரிசா’ வன்முறை தொடர்பாக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது தவறான முன்னுதாரணம் என்று கூறிய அவர் அந்த நிறுவனங்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களை மத அடிப்படையில் சிந்திக்கத் தூண்டுகின்றனவா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

உலகத்திக்கே வழி காட்டிக் கொண்டிருந்த இவர்களின் எண்ணிக்கை தற்போது பெருமளவில் குறைந்துவிட்டது. சிறுபான்மையினராக இருக்கும் மற்ற மதத்தினர் பெரும்பான்மையினராகவும், பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள் சிறுபாண்மையினராகவும் மாறிக்கொண்டு வரும் பேராபயத்தை இன்னும் இவர்கள் உணர்ந்துக்கொள்ளவில்லை. இந்த இனம் அழிந்துகொண்டு வரும் ஒரு இனமாக மாறிவிட்டதை அறிந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது. சமயச்சார்பின்மையில் அதிக பற்றுக்கொண்டிருக்கும் இந்து மதம், தன் இனத்தை அழிப்பதின் மூலம் அதை கட்டிக்காக்க நினைப்பது முட்டாள்தனம். இந்துக்கள் தம் இனத்தாரின் வளர்ச்சிக்காக உதவாமல் முழுக்க முழுக்க சுயநலமாக செயல்படுவது வீழ்ச்சியின் வேகத்தை இன்னும் பலப்படுத்தவே உதவும். இவற்றையெல்லாம் ஏற்கனவே அறிந்திருப்பனும், உணர்ந்திருப்பனும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்காதது இவர்களின் சாபக்கேடு போலும்.

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
 
Disclaimer: Most of the contents of this site are contributed by readers. TAMILCAFE.NET cannot be held responsible for authenticity of the contents or any copyright violation and views proposed by the author.
However, we are willing to take corrective actions.  This site also does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please send your queries to admin@tamilcafe.net